Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Oct 8, 2013

அரசு அலுவலக அனுபவங்கள்


வாழ்கையில் எல்லோருக்கும் ஏதோவொரு நாளின் நல்ல/கெட்ட நேரத்தில் ஏதேனும் அரசு அலுவலகத்தின் வாசலை மிதித்திருக்க வேண்டும். அது பதிவு அலுவலகம், போலீஸ், கோர்ட் அல்லது கோட்டை என வித விதமான அனுபங்கள் கிடைத்த இடமாக இருக்கலாம். சிலருக்கு அவற்றை நினைத்து சிரிக்க தோன்றும் சிலருக்கு எரிச்சல் மிஞ்சும். 

என்னை பொறுத்த வரை அரசு ஊழியர்களை பற்றி மிக மோசமான மன நிலையையே கொண்டுள்ளேன் (நல்லவர்கள் மன்னித்துக்கொள்ளவும்). எல்லோரும் அவர்களின் வேலைகளுக்கு தகுதியானவர்களே ஆனால் அவர்களின் செயலால் கீழான நிலைக்கு செல்கின்றனர். வேலை கிடைக்கும்வரை காட்டும் முனைப்பை, சேர்ந்த பின்பு காட்டுவதில்லை.  இங்கே என்னுடைய அனுபங்களை பகிர்கின்றேன்.

முதல் அனுபவம்: 

நான் பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றுக்கு செல்லும்போது  சாதி சான்றிதழ் தேவைப்பட்டது. அதனால் அது சம்பந்தமாக ஊரில் இருந்த நண்பரிடம் கேட்க, அவர் நீண்ட விளக்கம் கொடுத்து, அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்தார். முதலில் சந்தித்தது மணியக்காரர், நான் கண்ட முதல் அரசு அதிகாரி. அரசு அலுவலகம் பற்றிய எண்ணத்தை தவிடு பொடியாக்கியதும் இந்த இடம் தான். முன் புறம் தென்னை ஓலையில் வேய்ந்து மிக சாதரணமாக இருந்தது. என் இரண்டு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.  எங்களை பார்த்ததும் காரணத்தை கேட்டவர் விண்ணப்பத்தை வைத்து விட்டு அவருக்கு கார்பன் மற்றும் A4 பேப்பரும் வாங்கி வரச்சொன்னார். என் நண்பர்கள் இருவரும் அதை செய்ய தயாராக இருக்க என்னால் தடுக்க முடியாமல் அன்று செய்தேன். பலனாக அவர் சான்றிதழில் கையெழுத்து இட்டார்.

அதற்கு அடுத்தபடியாக ரெவென்யு இன்ஸ்பெக்டர். இவர் எங்கள் ஊரிலிருந்து 15 கிமீ தள்ளி இருந்தார். அதனால் அடுத்த நாள் அவரை சந்திக்க முடிவெடுத்து காலையிலேயே சென்றோம். காலை 10 மணிக்கு சென்றால் யாருமே இல்லை. 11 மணிக்கு அவரது உதவியாளர் மட்டும் வந்தார். எங்களை காத்திருக்க சொல்லிவிட்டு அவர் வேலையை  தொடங்கினார். மதியம் வரை இன்ஸ்பெக்டரை ஆளையே காணவில்லை. பசி வேறு வயிரை குடைய, வேறு வழியில்லாமல் அதற்கு பிறகு தாசில்தாரை சந்திக்க என்று வீட்டில் வாங்கிய பணத்தில் மதியம் சாப்பிட்டோம்.  பின்னர் வந்து அலுவலகம் முன்பு இருந்த மரத்தடியில் ஒரு குட்டி தூக்கம் போட, ஆபிசர் 3 மணிக்கு வந்தார். உடனே சென்று பார்த்தால் வேறு சிலருடன் பேசிகொண்டிருக்க, ஒரு அரை மணி நேரம் காக்க வேண்டி இருந்தது. எங்களை அவரே அழைக்க கால்கள் தரையில் படாமல் சென்றோம். அவர் உடனே கையெழுத்து போட்டுவிட்டு காசை கேட்க, நான் ஒன்றுமே இல்லை என்றேன் முந்திக்கொண்டு. அவரின் உதவி மதியம் சாப்பிட மட்டும் காசிருக்கா என்றார். கோவத்தில் பதிலுக்கு பதில் பேச உதவி அடங்கினார். இறுதியில் வெற்றி எங்களுக்கே. காசில்லாமல் கையெழுத்து. 

அடுத்து தாசில்தார், அவரை சந்திக்க அடுத்த நாள் சென்றேன்.அந்த இடம் மட்டுமே நான் சினிமாவில் பார்த்தது போல் இருந்தது. முதலில் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு பத்து நாள் கழித்து வரச்சொன்னார் ஒரு உதவி. பத்து நாளுக்கு பின்பு ஒரு வாரம் நடந்தும் சான்றிதழ் தரவில்லை. அவர் எதிர்பார்ப்பும் தெரிந்தது. ஆனால் அவருக்கு எந்த வகையிலும் உதவ நான் தயாரில்லை. எனவே எவ்வளவு நாட்கள் ஆனாலும் காத்திருப்பது என முடிவெடுத்தேன். ஒரு வாரம் இதே நிலை நீடிக்க தாசில்தாரை சந்திக்க முடிவெடுத்தேன். அவரை சந்திக்க உதவி தடுக்க மீறி சென்று சந்தித்து நிலைமையை விளக்கினேன். அவரும் எல்லோர் முன்னிலையிலும் கேட்டதாலோ என்னவோ உடனே சான்றிதழை கொடுக்க சொல்ல அங்கேயும் கையூட்டு கொடுக்காமல் வேலை நடந்தது.

நீங்கள் கையூட்டு கொடுத்த விவரத்தை அதாவது, எந்த அலுவலகத்தில் ,யாருக்கு, என்று, எவ்வளவு கொடுத்தீர்கள் போன்ற தகவல்களை WWW.IpaidBribe.COM ல் தெரிவிப்பதன் மூலம் ஊழலை வெளிக்கொணரலாம். (ஆனால் இப்படி பணத்தை வாங்கும் அசிங்கங்கள் இதெற்கு எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்)


இப்படி தொடக்கமே அமைந்ததாலோ என்னவோ இன்று வரை எப்பொழுதும் எந்த இடத்திலும் கையூட்டு கொடுக்க மனம் வருவதில்லை. தொடரும்.....



image courtesy www.searchandhra.com

Oct 3, 2013

அரசியல் அசிங்கங்கள்


நேற்றைக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்த கருத்து நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பொய் வழக்கு போட்டு சிறுபான்மையினர் அதிக அளவில் சிறையில் அடைக்கப்படுவதாகவும். அவ்வாறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் அது சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மற்றும் அந்த  நபரை விடுதலை செய்வதுடன் அவர்களது மறு வாழ்வுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். 

என்றைக்கும் காங்கிரஸ் மத சார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு சிறுபான்மையினருக்கு கங்கணம் கட்டிக்கொண்டு அவர்களின் காலை கழுவி விடும் வேலையை செய்கின்றனர்.  அது தவறில்லை ஆனால் சிறுபான்மையினர் என்பது முஸ்லீம்கள் மட்டும் அல்ல என்பது யார் புரிய வைப்பது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையில் சிறுபான்மையினர் நல நிதிகள் / அரசு உதவிகள் முஸ்லிம் மக்களை சென்று அடைவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தது. இது முக்கியமாக இம்மக்களுக்கென அதிக திட்டங்களை / நிதிகளை ஒதுக்கும் பீகார் மற்றும் உத்தர் பிரதேஷ மாநிலங்களில் நடைபெறுகிறது. இதை பற்றி எந்த அரசியல் வியாதியும் கவலை படுவதில்லை. ஏனெனில் அதை சுரண்டுவதே அவர்கள்தான். ஆனால் தீவிரவாத நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தவிர என்று கூட அறிக்கையில் தெரிவிக்காமல் பொதுவாக என்று கூறியுள்ள இவர் எதிர் வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டே. எப்படியோ இதனால் நான்கு ஓட்டு கிடைத்தால் சரி!.

-----------------  

முன்னால் பீகார் முதல்வர் லாலு பிரசாத், அவரது பதவிக்காலத்தில் செய்த  37.70 கோடி ரூபாய் ஊழலுக்காக 17 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இன்னொரு முதல்வர் மிஸ்ரா, இரண்டு அமைச்சர்கள் மற்றும் இரண்டு IAS அதிகாரிகளும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றம் ஐந்து வருட தண்டனை விதித்து உள்ளது. இதன் மூலம் அவர் தனது MP பதவியை இழந்துள்ளார்.      பத்திரிக்கைகள் நீதி நிலை நாட்டப்படதாக எழுதுகின்றன. அது எவ்வளவு நாட்களுக்கு நிலையானது என வரும் காலம் தெரியப்படுத்தும்.

இதே போல ஒரு வாரம் முன்பு ரஷீத் மசூல் என்ற காங்கிரஸ் MP தொண்ணூறுகளில் வி பி சிங் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். அப்போது மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தகுதி இல்லாத மாணவர்களை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டு தண்டனை பெற்றுள்ளார். இவர் தான் இரு மாதங்களுக்கு முன்பு ஐந்தே ரூபாயில் தன்னால் டெல்லியில் உணவு சாப்பிட முடியும் என்று கூறியவர்.

சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவு படி வழக்குகளில் தண்டனை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி  பறிக்கப்படும். அதன் படி தண்டிக்கப்படும் முதல் நபராக ரஷீதும் இரண்டாவதாக லாலுவும் உள்ளனர். அப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நம் மாநிலத்தில் மட்டுமே நூற்றுக்கணக்கில் உள்ளனர். பார்ப்போம் இன்னும் யாரெல்லாம் இதில் சிக்குவார்கள் என.

-----------------

வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல் சேவகர்களின் பதவி பறிக்கப்படும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து மத்திய அரசு அவசரமாக இந்த தீர்ப்பை எதிர்த்து அவசர சட்டம் இயற்றி அதனை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது. இதற்கு பின்னர் பிரதமர் வெளிநாடு சென்றுவிட அது வரை தனக்கு எதுவுமே தெரியாது போலவும்,கண் விழித்து பார்க்கும்போது இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற பார்ப்பதை உணர்ந்த சூப்பர் பிரதமரின் மகன் திருவாளர் ராகுல் காந்தி அவர்கள் பிரதமரை அவர் வீட்டு வேலைக்காரன் போல திட்டினார். அது எதிர் கட்சிகளுக்கும் மீடியாவுக்கும் அவல் கிடைத்தது போல் வறுத்து எடுத்து விட்டனர். இறுதியில் மத்திய அரசு அவசர சட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இறுதியில் நடந்த கூட்டணி கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி கடைசி வரை போராடி பார்த்துள்ளது இந்த சட்டத்தை நிறைவேற்ற. இவர்களுக்கு ஓட்டு போடுவதை மறு பரிசீலனை செய்யுங்கள்.