Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Oct 9, 2013

குடி நாடு


சிறுசு முதல் பெருசு வரை எல்லோரும் வரையறையின்றி இன்றைக்கு சங்கமிக்கும் இடம் டாஸ்மாக்.  முன்பு பண்டிகைக்கு குடித்தவர்கள் இப்பொழுது காரணமே தேவைப்படாமல் எல்லா நாளும் குடிக்கின்றார்கள். இதில் வருத்தப்படும் விஷயம் இளம் வயதினரின் குடிப்பழக்கம். சந்தோசத்தையும் துக்கத்தையும் காரணம் காட்டி குடிக்கின்றனர். முன்பெல்லாம் குடிக்க காரணங்களாக வீட்டு பிரச்சனைகள், வேலை அல்லது கடன் பிரச்சனைகள் இருந்தன. இன்றைக்கு ஒருவர்  வேலை கிடைத்தாலும்,  வேலை போனாலும் குடிக்கின்றனர். குழந்தை பிறந்தாலும், வீட்டில் யாரவது இறந்தாலும் குடிக்கின்றனர். இந்த நிலையை ஏற்படுத்திய பெருமை முழுக்க திமுக மற்றும் அதிமுக வையே சேரும். 

இன்றைய சினிமாக்காரர்கள் குடிகாரர்களை மகா குடிகாரர்கள் ஆக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளியாகும் திரைப்படங்களில் குறைந்தபட்சம் ஒரு குடிக்கும் காட்சியாவதுஇடம் பெறுகிறது. மூன்று, நான்கு படங்கள் முழுக்க டாஸ்மாக்கிலேயே எடுக்கப்படுகிறது. அவையே மிகப்பெரும் வெற்றியடைகின்றன. இன்றைக்கு கதாநாயகன் குடிக்காதவனாக காட்டும் படம் என்பது மிக அரிது. படத்தின் trailer கூட குடிப்பதை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.  படத்தில் இப்போது புகை பிடிக்கும்போது அல்லது மது அருந்தும்போது எச்சரிக்கை வாசகங்கள் காட்டப்படுகின்றன. சில படங்கள் முழுக்க இந்த வாசகங்கள் காட்டப்படுகின்றன. மதுவை சினிமாவும் காசாக்குகிறது.    

பள்ளி செல்லும் சிறுவர்கள் கூட இன்றைக்கு குடித்துவிட்டு வீடியோ/போட்டோ க்களை youtube/facebook ல் போட்டு பெருமை பட்டுக்கொள்கின்றனர். அரசும் குடிப்பதை ஊக்குவித்து வருமானம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. நேற்றைக்கு சாதாரண கடைகள் பிறகு பார் உள்ள கடைகள் என்றும் பின்பு elite பார் கடைகள் என்றும், இன்றைக்கு IMFL (இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது) கடைகள் என்று பெருகிக்கொண்டே செல்கின்றது. அரசுக்கு வருமானம் இரண்டு வழிகளில் வருகின்றது. ஒன்று டாஸ்மாக் மது விற்பனை மற்றொன்று கடைக்கு வெளியில் போலீசை நிறுத்தி பண வசூல். இது உலகத்தில் எங்கேயும் நடக்காது. 

கடந்த ஐந்து வருட மது விற்பனை தமிழகத்தில் மட்டும் ரூ  77,820 கோடி, வெறும் 6800 விற்பனை மையங்களை கொண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மலைக்க வைக்கும் தொகை. வேறு எந்த தொழிலிலும் ஈட்ட முடியாதது. மற்ற எல்லாவற்றையும் விட தமிழகம் மதுவால் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த வருடத்தில் கர்நாடகா 13,842 கோடிக்கும், ஆந்திரா 14,846 கோடிக்கும், வெறும் 400 கடைகளை கொண்டுள்ள கேரளா கூட 7,860 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. ஆனால் தமிழகம் இக்காலத்தில் 22,000 கோடிக்கு விற்று முன்னிலை வகிக்கிறது. டாஸ்மாக் கொள்முதல் செய்வது வெறும் 10 நிறுவனங்களிடம் இருந்துதான். சராசரியாக 2,000 கோடியை இவை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன. இவற்றில் பெரும்பாலும் முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல்வியாதிகளால் அல்லது அவர்களின் பினாமிகளால் நடத்தப்படுபவை. 

சென்ற வருடத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் என்று போலீசில் பிடிபட்டவர்கள் சுமார் 15,000 பேர். இவர்களிடம் அபராதமாக வசூலிக்கப்பட்டது ரூ 1,000 என வைத்துக்கொண்டாலும் அரசுக்கு வருமானம் ஒரு கோடி ஐந்து இலட்சம். சென்ற வருடம் நடந்த மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 63,909. இதில் இறந்தவர்கள் மட்டும் 15,080. காயம் அடைந்தவர்கள் சுமார் 78,000ம் பேர். இவர்கள் 50 சதவிகிதம் பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்கள் என கொண்டால், அதாவது 39,000 பேர் (ஆனால் அரசின் இணைய தளம் வெறும் 15,000 பேர் மட்டுமே குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக கணக்கு காட்டுகிறது) மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று குறைந்த அளவாக/சராசரியாக ரூ. 3,000 செலவு செய்திருந்தால் அதன் மொத்த தொகை ரூ. 11.70 கோடிகள். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு தெரு நாய் குடித்து விட்டு காரை ஓட்டி வந்து என் மேல் மோதியதில் எனக்கு கால் உடைந்ததுடன் செலவு நான்கு லட்சம். எனவே 3,000 என்பது மிக குறைந்த தொகை. இப்படி எல்லா இடங்களிலும் பணப்புழக்கத்திற்கு காரணாமாக இருப்பது  டாஸ்மாக தான்.

இன்னும் பத்து வருடங்களில் அரசின் வருமானம் பெருகி விடும் கூடவே குற்றங்களும் பெருகும் ஆனால் அவற்றை தடுக்க காவலர்கள் இருக்கமாட்டார்கள்.

Feb 6, 2013

விஸ்வரூபம் - விமர்சனம் அல்ல


விஸ்வரூபம் - இந்த படத்தை கமல் எந்த நேரத்தில் தொடங்கினாரோ எல்லா வகையுளும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி கொண்டிருகிறது.

பல தடைகளை (:)) தாண்டி கடந்த மாதம் 26 அன்று உலகமெங்கும் வெளியிடப்பட்டது தமிழகம் தவிர (1000 பஞ்சாயத்து இருக்கு சொல்ல ஒன்ன ரெண்டா). அடிச்சு புடிச்சு சத்யம்ல புக் பண்ணா, ரிலீஸ் அன்னைக்கு நோட்டீஸ் போர்டு போட்டு பணத்தை திருப்பி தரோம்னு சொல்லிட்டாங்க. போங்கடா நீங்களும் உங்க சாமி பக்தியும் னு திட்டிட்டு கேரளாவில் படாத பார்க்கலாம்னு நெனச்சேன்.

கேரளா நமக்கு ரொம்ப பக்கம், ஒரு வாரம்  பழனி கோவில் சென்று விட்ட காரணத்தால் என்னால் முதல் நாள் பார்க்க முடியவில்லை. கடந்த சனிகிழமை அன்று தான் பார்க்கும் முடிவுக்கு வந்தேன். இதற்கு முன்பே குறைந்த பட்சம் 100 விமர்சனங்களை படித்துவிட்டேன்.

சனிக்கிழமை மதியம் நானும் என் மனைவியும் பாலக்காடு சென்று பார்க்கலாம் என முடிவெடுத்து புறப்பட்டோம்.

பாதி வழியில் திட்டத்தை மாற்றி கொண்டு வேலாந்தவளம் சென்று பார்க்கலாம் என முடிவாயிற்று.

அதிலும் ஒரு சோதனை வேலாந்தவளம் சென்றால் ஒரு அரங்கத்தில் மட்டுமே படம் வெளியிடப்பட்டுள்ளது ஆனால் பாலக்காட்டில் 3 அரங்கங்களில் திரையிடப்பட்டுள்ளது. இங்கு டிக்கெட் இல்லை என்றால் திரும்பவும் பாலக்காடு செல்ல அல்லைச்சல் அதிகம்.

வேலாந்தவளம், பாலக்காட்டு-கோவை  மெயின் ரோட்டில் இருந்து ஒரு 10 km இருக்கும். சாலையின் தரம் தான் மிக கேவலமாக இருந்தது . தினமும் இதில் பயணிக்கும் மக்களின் நிலைமை மிக மோசமானது.

இந்த அழகான பயணத்தின் இறுதி அந்த அரங்கத்தில் முடிவடைந்தது. நாம் மட்டும் புத்திசாலி என நினைக்கும் போது  மூக்கு உடைபடுவோம். அது எனக்கு அங்கே நடந்தது. மிக சிறிய அரங்கம் ரசிகர்கள் கூட்டத்தால் திணறியது.



என் மனைவியை வைத்துகொண்டு இங்கு படம் பார்ப்பது முட்டாள் தனமான (டிக்கெட் கிடைக்கவில்லை :)) காரியம் என்று கிளம்ப நினைக்கும்போது, இவளவு தூரம் வந்தும் படம் பார்க்காமல் போவது சரியா என கேட்டதால் பாலக்காடு  செல்ல முடிவெடுத்து கிளம்பினோம். வேலாந்தவளம் to பாலக்காடு  ரோடு மிக அருமையாக இருந்தது. பயண அலுப்பு சிறிது கூட ஏற்படவில்லை.

பாலக்காட்டில் ஸ்ரீ துர்கா அரங்கம்  மிக அருகில் இருந்ததால் அங்கு மட்டும் சென்று பார்போம் என முடிவெடுத்தோம். ஆனால்  அங்கேயும் கோவை மக்கள் குவிந்து இருந்தனர். பார்க்கிங் செய்உம்போது ஒருவர் Rs 1000 குடுத்து  இதை  போய் பார்க்கின்றனர் என்று கடுப்பை கிளப்பினர். பிறகு விசாரித்ததில் தெரிந்தது அடுத்த ஷோவும் விற்று தீர்ந்தது என்று.




இதில் கொடுமை என்னவென்றால் மதிய உணவை மறந்து இந்த வேலையை  செய்து கொண்டிருந்தோம். சரி இனி அந்த வேலையையாவது ஒழுங்காக முடிப்போம் என்று அருகில் இருந்த  Jobey mall  சென்றோம்.

வழக்கம் போல Food  Court கடைசி தளத்தில் இருந்தது. கேரளா ஸ்டைல் உணவை ஒரு பிடி பிடிக்கலாம் எனும் சந்தோஷம் மற்றும் ஹோட்டல்-ம் அதற்கு ஏற்ப மிக பெரிதாக இருந்ததால் நம்பி உட்கார்ந்தோம்.

எல்லா ஆட்களும் மிக அழகாக உடை உடுத்தி இருந்தனர். ஆனால் சாப்பாடு கொடுங்கடான்னு வாய தொறந்து கேட்டா கூட கண்டுக்கல.  அதையும் மீறி ஆர்டர் பண்ணா கேட்கற ஏதும் இல்லன்னு சொன்னான், சரி ராஜா என்னதான் இருக்குனு கேட்ட பரோட்டா-ம் சப்பாத்தி மட்டும் தான்னான். ஓகே கொண்டு வர சொல்லிடு வெயிட் பண்ணா   கொண்டு வந்தான் பாருங்க ஒரு சாப்பாடு. ஒரு taste ம் இல்ல. வெறுத்து போச்சு. பேசாம பில்லை கொடுத்துட்டு வெளிய வந்துட்டு  ஒரு நல்ல கடையா  பார்த்து ஐஸ் கிரீம் சாப்டோம் .



இன்னைக்கு திரும்பவும் தமிழ் நாட்டில் படம் வெளியிட தடை நீக்கப்பட்டு உள்ளது. மீண்டும் அதே சத்யம் சினிமா ல் புக் செய்துள்ளேன். படத்தை பார்த்து விட்டு கண்டிப்பாக விமர்சனம் எழுத மாட்டேன்.  :::)