Showing posts with label தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts

Oct 7, 2013

கனவுகளின் நாயகன்



இந்த நூற்றாண்டின் இணையற்ற தொழில்நுட்ப மேதை ஸ்டீவ் ஜாப்ஸ். இன்று (October 5) அவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள். தினமும் அவரை நினைவு கூற ஏராளமான விசயங்களை நம்மிடையே விட்டுச்சென்றுள்ளார். அவரை பற்றி சில தகவல்கள் இங்கே:

# இவர் தந்தை சிரியாவை சேர்ந்தவர் தாய் சுவிஸ். தத்து குழந்தையாக எடுத்து வளர்க்கப்பட்டவர்.

# கல்லூரி படிப்பு பிடிக்காமல் வெளியேறி, தன் நண்பர் ஸ்டீவ் வோஜ்னியாக்குடன் சேர்ந்து வீட்டு கார் கேரேஜில் ஆப்பிளை ஆரம்பித்தார். இவர் salesman நண்பர் வோஜ்னியாக் engineer. 

# தனக்கு மிகப்பிடித்த Beatles Apple ஆல்பமில் இருந்து தன்னுடைய கம்பெனி பெயரை தேர்வு செய்தார்.

#  அவருடைய முதல் வெற்றிகரமான Apple II மற்றும் அடுத்து வெற்றி பெற்ற Mac இருபத்தைந்து வயதில் அவரை மில்லியனர் ஆக்கியது. இவை Microsoft என்ற நிறுவனத்திற்கு தூண்டுகோலாக இருந்தது.

# 1985ம் வருடம் இவரால் பெப்ஸி கம்பெனியில் இருந்து வேலைக்கு சேர்க்கப்பட்ட Sculley என்பவருடன் ஏற்பட்ட பிரச்னையில் ஆப்பிளில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

# முப்பது வயதில் ஆப்பிளுக்கு போட்டியாக Next என்ற நிறுவனத்தை தொடங்கி Microsoft கணிப்பொறிகளை விற்க ஆரம்பித்தார். இதை உபயோகித்து Tim Berners Lee இண்டர்நெட்டை கண்டுபிடித்தார். 

# 1986ம் ஆண்டு அனிமேஷன் துறையின் முதல் நிறுவனமான Graphics Group என்ற நிறுவனத்தை ஜார்ஜ் லுகாசிடம் இருந்து $5 மில்லியனுக்கு வாங்கினார். அதனை Pixar என்று பெயர் மாற்றினார்.

# 1993 ம் ஆண்டு Toy Story உலகின் முதல் அனிமேஷன் திரைப்படமாக வந்தது. பின்னர் 2006ம் ஆண்டு டிஸ்னிக்கு Pixarஐ $8 பில்லியனுக்கு விற்றார்.

# 1995ல் ஆப்பிள் நிறுவனம் மிக மோசமான நிலைக்கு சென்றது. Next நிறுவனத்தை ஆப்பிள் வாங்கியதன் மூலம் 1996ல் மறுபடியும் ஸ்டீவ் "அட்வைசராக வந்தார்.

# iMac வெளியிட்டு ஆப்பிளை உயர்த்த, பின்பு அவர் தொட்டதெல்லாம் பொன் (iPod, iPhone, iPad)   

# மொத்தம் முன்னூறு காப்புரிமைகளை வைத்திருந்தார்.


Aug 18, 2013

Google+ கருத்துக்களை blogger-ல் தெரிய வைக்க

இன்றைய பிளாக்கர் உலகில் ப்ளாக் எழுதுவதை விட கடினமானது கருத்துக்களை தெரிவிப்பது. நாம் என்னதான் மற்ற பிளாக்கரின் ப்ளாக்களை மாய்ந்து மாய்ந்து படித்து கருத்து தெரிவித்தாலும் நம்முடைய பாத்திரத்திற்கு என்ன கிடைக்கிறது என்பதே மிக முக்கியம். 

இப்பொழுது ப்ளாக்-களை Google+ லும் இணைத்துக்கொள்ளும் வசதி உள்ளதால், அதற்கான கருத்துக்களை அங்கேயே தெரிவிக்கவும் முடிகின்றது. இப்படி ஒரு ப்ளாக்-குக்கான கருத்துக்கள்  இரண்டு இடங்களில் தெரிவிக்க வசதி உள்ளது. 

இப்பொழுது Google+ கருத்துக்களை நம்முடைய பிளாக்கரில் இணைத்துக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் வலைப்பதிவில் வாசகர்கள் இப்போது பகிரங்கமாக, அல்லது தனிப்பட்ட முறையில் Google+ இல் தமது வட்டங்களில் கருத்துக்களை தெரிவிக்கலாம். கருத்துக்களை பார்க்கும்போது போது, அவர்கள் வட்டங்களில் உள்ளவர்களின் கருத்துக்களை மட்டுமே காண முடியும். மேலும் இவை top comments என வகைப்படுதப்படுகிறது.